Search This Blog

இதுதான் ஆரம்பம்...@!!@

வணக்கம் நண்பர்களே...@!!@


"எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் மெய்ப்பொருள் காண்பது அறிவு" என்பார்கள். நானும் பல வலைகளை பார்வையிட்டு அதன் தூண்டுதல் காரணமாக சொந்த வலைத்தளத்தை ஆரம்பித்திருக்கிறேன்.
என் பதிவுகளை மேலோட்டமாக படிக்காது ஆழ்ந்து ஆராயுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
நான் ஒன்றும் 100% perfect அல்ல. நீங்கள் என்னுடன் தாராளமாக விவாதிக்கலாம். தலையில் குட்டு வைக்கலாம். பாதகமில்லை.
உங்கள் ஆதரவின்றி நான் செயற்பட முடியாது...

ஒரு information & communication technology ஆசிரியன் என்ற வகையிலும், அதிகளவு ஆங்கில மொழி பேசும் நண்பர்களை உடையவன் என்றபடியாலும் முழுக்க முழுக்க தமிழிலேயே என்னால் பதிவுகளை வடித்திட இயலாது. இடைக்கிடையே ஆங்கிலமும் எட்டிப்பார்க்கலாம். பொறுத்துக்கொள்ளுங்கள். ஆனால் தமிழ் 90% என்றால் ஆங்கிலம் 10% தான் இருக்கும். எனவே நீங்கள் எனக்கு தொடர்ச்சியாக ஆதரவளிப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் தொடர்கிறேன்...

நன்றி

No comments

Powered by Blogger.