Search This Blog

Thoughts of Swami Vivekanandha - சுவாமிஜி விவேகானந்தரின் சிந்தனைகள் (Part 1)




வணக்கம் நண்பர்களே... hi friends...

எதிலும் தொடக்கம் மங்களகரமாய் அமைதல் வேண்டும். இல்லையெனில் மனதில் ஒரு பாரம் அழுத்திக்கொண்டிருப்பதைப்போல் அவஸ்தையாய் இருக்கும். என் முதல் பதிவோ என் வருகையை பறைசாற்றுவதாய் அமைந்துவிட இந்த 2வது பதிவிலாவது ஏதேனும் நல்ல விடயங்களை பகிரலாம் என நினைத்தேன். விளைவு சுவாமிஜி விவேகானந்தரின் சிந்தனைகள். சுவாமியின் சிந்தனைகளை ஒரு பதிவில் கொடுப்பதென்பது சாத்தியமற்ற விடயம். எனவே இது பகுதிகளாய் தொடரும்.

மேலும் சுவாமிஜியின் கருத்துகளை பதிவு செய்யும்போது வேற்று மதத்தைச் சேர்ந்த நண்பர்கள் வேதனைப்படலாம். காரணம் சநாதன தர்மத்தை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லையே! சுவாமிஜியை சிந்திக்க தூண்டியதே சநாதன தர்மந்தானே! எனவே இப்பதிவு யார் மனதையாவது புண்படுத்துமாயிருந்தால் ஆரம்பத்திலேயே மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அதற்காக இப்பதிவை வேற்று மதத்தவர் படிக்ககூடாதென்றில்லை. ஒரே சமுகத்தில் வாழும்போது வேற்று மத சாராம்சத்தை தெரிந்து வைத்திருப்பதில் தவறில்லையே!

இனி சிந்தனைகள்... Some Thoughts...


  • "நீங்கள் உங்களை ஆன்மாவாக உடலிலிருந்து பிரிந்த ஒன்றாக நினையுங்கள் ; ஆரம்பத்தில் முடியாதோ என்றுதான் தோன்றும் ; இடைவிடாது பயிற்சி செய்யுங்கள் ; என்னால் முடியுமென்றால் உங்களாலும் முடியும் ; நீங்கள் உங்களை ஆன்மாவாக உணரும்போது உங்களுக்கு உடல் நினைவே இராது."
  • "When you are doing any work - do it as worship ; as the highest worship & devote your whole life to it for the time being. "
  • "தனிநபர் வழிபாட்டை உபநிடதங்கள் ஏற்றுக்கொள்வதில்லை ; உபநிடதங்கள் என்றால் இறைவனை உணர்ந்த ஒருவர் கூறும் வார்த்தைகள் ; எனவே இறைவனை சேர்ந்து வணங்குங்கள் ; சநாதன தர்மம் மட்டுமே இவ்வுலகில் எந்தவொரு தனிமனிதரையும் சாராத மார்க்கம் என்பதை அறியுங்கள்."
  • "Purity, Patient & Perseverance are the three essentials to success ; and above all Love." 
  • "எங்கோ ஒரு சொர்க்கத்தில் இருக்கும் கடவுள் ஒருவர் தாமே கடவுள் என்று யாரிடமோ கூறியதாக தங்கள் முப்பாட்டனார்கள் சொல்லிவந்த பழைய கொள்கைகளையே இன்னும் சிலர் நம்பிக்கொண்டிருக்கிறார்கள் ; நாம் பிறவியிலேயே பாவிகள் தீயவர்கள் என்று சொல்வதுதான் நீங்கள் சொல்ல முடிந்தவற்றிலேயே மிகப்பெரிய பொய்"
  • "In a day, when you don't come across any problems - you can be sure that You are travelling in a wrong path." 
  • "இயற்கை முழுவதிலும் இரு சக்திகள் செயற்படுகின்றன ; இவற்றுள் ஒன்று மனிதர்களை எப்போதும் பிரித்துக்கொண்டே இருக்கிறது ; மற்றது எப்போதும் சேர்த்துக்கொண்டே இருக்கிறது."
  • "You Can not believe in god until You believe in yourself."
  • "ஆற்றல்மிக்க தீவிரமான மனச்சாட்சிப்படி நடக்கும் இளைஞர்கள் 100 பேர் போதும் ; உலகையே புரட்டி விடலாம்."
  • "In all our actions - errors & mistakes are our only teachers ; Who commits mistakes - the path of truth is attainable by him only."
  • "உங்கள் விதிக்கு நீங்களே காரணம் ; ஆகவே எழுந்திருங்கள் ; விழித்துக்கொள்ளுங்கள் ; உங்கள் எதிர்காலத்தை நீங்களே உருவாக்கிக் கொள்ளுங்கள்."
  • "No force can be created ; It can only be directed ; There for we must learn to control the ground powers that are only in our hands & by will power make them spiritual instead of merely animal." 
  • "நீங்கள் இறைவனை உணர்ந்தால் உங்கள் முகம் மாறிவிடும் ; உங்கள் குரல் மாறிவிடும் ; உங்கள் தோற்றமே மாறிவிடும் ; நீங்கள் மனிதகுலத்திற்கு ஒரு வரப்பிரசாதமாக இருப்பீர்கள்."

நன்றி 
வணக்கம்


No comments

Powered by Blogger.